tamilnadu

img

ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்

ஹைதராபாத்,செப்.8- தெலுங்கானா மாநில ஆளுநராக  தமிழிசை  சவுந்தர ராஜன்  சனிக்கிழமையன்று பதவியேற்றுக் கொண்டார். தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.  தமிழக பா.ஜ.க. தலைவரான தமிழிசை சவுந்தரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து, கடந்த 1-ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

;